அது ஒரு அடர்ந்த
காடு போல் தெரிகிறது
வெண்ணிறப் பூக்களின்
மொட்டவிழ்ப்பு வசீகரிக்கிறது
நீரோடையும் அதனருகில்
யானை கூட்டங்களும் தெரிகிறது
முட்களும் புதர்களும் உதிர்ந்த
இலைகளால் மறைந்திருக்கிறது
கரும்பச்சை நிற இலைகள் கொண்ட
மரங்கள் மிரட்சியுடன் நிற்கிறது
இளைப்பாறும் புலிகள்
இரண்டும் தெரிகிறது
மரக்கிளை ஒன்றில்
சத்தமின்றி படர்கிறது
பழுப்பு நிற மலைப்பாம்பு
கலையக்கூடும் பறவைக் கூடு
ஏதும் உள்ளதா என்றஞ்சி
கிளைகளில் கண் தேடும் நேரத்தில்
கலைந்து நகர்கிறது
இதுவரை
கண்டிருந்த மேகமொன்று.
.